செய்திகள் :

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

post image

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு உண்மையல்ல என பின்பு ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.

பியூஸ் மானுஷ்
பியூஸ் மானுஷ்

இதற்கிடையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், `அண்ணாமலை பேச்சு நாத்திகர்கள் மீதான நேரடி மிரட்டில். மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடக்கும் என மிரட்டில் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார்' என அவர்மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், ``அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்' எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு எதிராக மிஷனரிகள் செயல்படுகின்றனர்' என அண்ணாமலை பேசிய வெறுப்புப் பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் அனுமதி பெறப்பட்டு வழக்கு நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதையும் உடைத்தோம். தற்போது இந்த வழக்கு ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பேசிய வெறுப்புப் பேச்சுக்காக இருவர்மீதும் திருப்பரங்குன்றத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவுசெய்யப்பட்டது. ஆனால் இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

இது போன்ற விவகாரங்களில் காவல்துறை ஓர் ஊமை அமைப்பாக இருக்கிறது. வெறுப்புப் பேச்சினால்தான் இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டது. இந்த வரலாற்றை காவல்துறை முழுமையாக உணரவில்லையோ எனத் தோன்றுகிறது. காவல்துறையினருக்கு இந்தச் சமூகப் பேராபத்து குறித்துத் தெளிவான அறிவு அல்லது சுயபுத்தி தேவை. ஆனால், என்ன நடந்தாலும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான என் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்றார்.

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை ல... மேலும் பார்க்க

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.இ... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க