செய்திகள் :

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

post image

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இவர்கள் சென்னை அண்ணாநகரில் குடியிருந்து வருகின்றனர். படிப்புக்காக லண்டனுக்குச் சென்ற கிஷிதிஜ், சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்த நிலையில், பிப்ரவரி 9-ம் தேதி நீராஜ் ஜெயின் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சோனாலியும் அவரின் மகனும் இருந்தனர். நீராஜ் ஜெயினுக்கு போன் செய்த சோனாலி, நானும் கிஷிதிஜ்ஜிம் விஷம் குடித்துவிட்டோம் எனக் கூறி, இணைப்பை துண்டித்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீராஜ் ஜெயின், வீட்டு வந்திருக்கிறார். அப்போது இருவரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்தனர். உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார் நீராஜ் ஜெயின்.

தற்கொலை
தற்கொலை

சோனாலியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிஷிதிஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குளுக்கோஸில் விஷம் கலந்து குடித்து தாயும் மகனும் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி இருவரும் விஷம் குடித்ததில் சோனாலி உயிரிழந்துவிட்டார். இவர்களின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

லண்டனிலிருந்து ஊர் திரும்பிய சில தினங்களில் இந்த விபரீத முடிவை தாயும் மகனும் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க

Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனா... மேலும் பார்க்க

வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொ... மேலும் பார்க்க

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த... மேலும் பார்க்க

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த... மேலும் பார்க்க