செய்திகள் :

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!' - டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

post image

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் ஸ்டாலின் உடனே குழுவை அமைக்க வேண்டும்.

விரைவில் தேர்தல் உடன்பாட்டை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை செய்ய எங்களுக்கு உரிய நேரம் தேவை.

கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம் தான் வரும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

பிஹார், ராஜஸ்தான், மாராட்டியத்தில் கடைசி நேரத்தில் முடிவெடுத்ததால் தான் சங்கடமானது.

இந்த அனுபவங்களை வைத்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும்.

திமுக பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது.

ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோரின் பயணத்திட்டங்கள் தயாராக இருக்கிறது. நாங்களும் தயாராக இருக்கிறோம். திமுக தயாராக இருக்கிறதா?

ராகுல் காந்தியுடன் பேசப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நாளை கூறுவோம்.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஸ்டாலின், செல்வப்பெருந்தகை

குழப்பம் எங்களிடம் இல்லை. நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். திமுக குழு அமைக்காமல் இருப்பது வருத்தத்தை தருகிறது என்று எல்லோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்தனர்" என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் டாக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் 'அமைப்புப் பொதுச்செயலாளர்' என்ற அதிகாரமிக்க ... மேலும் பார்க்க

நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்?" - ராகுல் காந்தி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன... மேலும் பார்க்க

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ... மேலும் பார்க்க

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க

திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன?

காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம்தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிர... மேலும் பார்க்க

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (SPSEs) குறித்து ஆய்வு செய்து, அதன் முதன்மை அறிக்கையில் 2022-23 நிதியாண்டுக்கான விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தி... மேலும் பார்க்க