செய்திகள் :

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

post image

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. அனைத்தும் முடிவான பின்பே தெரியும்.

ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது, ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய். அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்தவுடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம்.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர்.

நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்து அமைச்சர்களும் செயல்படுகின்றனர். ஏதோ அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது.

மக்களுக்கு புரிய வேண்டும் என ’கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ‘ என ஹிந்தியில் பெயர் வைத்துள்ளனர். தெரியாதவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பல திட்டங்களுக்கு தற்போது மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர்.

பிள்ளைகள் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும்போது பாதியில் நிறுத்திவிட்டனர் என செய்திகள் பார்த்தேன். மோசமான ஆட்சிக்கு இது ஒரு உதாரணம். நிர்வாக திறமையற்ற மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி. யாராவது இப்படி செய்வார்களா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேசிய தலைமை தற்போது தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தையை மாநில அளவில் முடிக்க முடியவில்லை என்பதால், அவர்கள் எடுத்துள்ளனர். நல்ல விதத்தில் முடியும்.

பாஜக எங்களது கூட்டணியில் தான் உள்ளனர். பாஜக கூப்பிட்டாலும் நாங்கள் கூப்பிட்டாலும் கூட்டணி எங்களுடன் தான். சிலர் அதிமுக-வை நம்பி வருவார்கள் சிலர் பாஜக-வை நம்பி வருவார்கள். பாஜக கூட்டினாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு தான் வருவார்கள்.

அதிமுக தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுக-விற்கு சாதகமாக வரும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என அமித்ஷா அறிவித்தார்.

சென்ற முறை ரூ.1500 அறிவித்தோம்.ஆனால் எங்களுக்கு முன்பே திமுக 1000 ரூபாய் அறிவித்தது எடுபட்டுவிட்டது. அதனால் இந்த முறை ரூ.2000 தருகிறோம் என முந்திக் கொண்டோம். இதற்கு வயிறு எரிந்தால் நாங்கள் என்ன செய்வது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செங்கோட்டையனை நினைத்து கண்ணீர் விட தான் வேண்டும். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார். செங்கோட்டையன் அவர்களுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது.

சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பலத்தில் டம் டம் என்று அடித்து வருகிறார். அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார். கண்ணீர் வடிக்கின்றோம் எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்று, அவரது நிலை தாழ்ந்து விட்டது” என்றார்.

பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் டாக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் 'அமைப்புப் பொதுச்செயலாளர்' என்ற அதிகாரமிக்க ... மேலும் பார்க்க

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!' - டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பி... மேலும் பார்க்க

நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்?" - ராகுல் காந்தி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன... மேலும் பார்க்க

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன?

காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம்தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிர... மேலும் பார்க்க

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (SPSEs) குறித்து ஆய்வு செய்து, அதன் முதன்மை அறிக்கையில் 2022-23 நிதியாண்டுக்கான விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தி... மேலும் பார்க்க