செய்திகள் :

வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!

post image

பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொலைசெய்துள்ளார். அங்குள்ள தர்ன் தரன் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரின்ஸ் ராஜ். இதே கல்லூரியில் படித்து வந்தவர் சந்தீப் கவுர். இரண்டு பேரும் ஒரே வகுப்பில்தான் படித்து வந்தனர். இன்று ராஜ் தான் படிக்கும் வகுப்பிற்குள் நுழைந்தபோது கவுர் எதோ சொல்லி இருக்கிறார். அந்நேரம் ராஜ் அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் கவுர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார்.

அவரை பின் தொடர்ந்து ராஜ் சென்றார். உடனே மற்றொரு மாணவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று சமாதானப்படுத்த முயன்றார். அதோடு அவர் ராஜ் மற்றும் கவுரை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்து வந்தார். கவுர் பின்னால் இருந்த இருக்கைக்கு சென்றார்.

ஆனால் ராஜ் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்நேரம் கவுர் தனது இருக்கையில் எழுந்து நின்றார். உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்த ராஜ், தனது பேக்கில் இருந்த துப்பாக்கியை எடுத்து கவுரை நோக்கி சுட்டார்.

அதோடு கவுர் கீழே விழுந்தவுடன் சில அடிகள் பின்னால் வந்து தனது தலையிலும் ராஜ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனை நேரில் பார்த்த சகமாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து வெளியில் ஓடினர். இருவரையும் போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது கவுர் இறந்திருந்தார். ராஜ்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த... மேலும் பார்க்க

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த... மேலும் பார்க்க

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க

கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!

மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில்... மேலும் பார்க்க

மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?

மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்... மேலும் பார்க்க

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் ... மேலும் பார்க்க