செய்திகள் :

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

post image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த வருவாய் உதவியாளர் சங்கர் (58). சொத்து வரி மாற்றம் செய்ய ஒரு வீட்டுக்குத் தலா ரூ. 5,000 வீதம் நான்கு வீடுகளுக்கு மொத்தம் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கதிர்வேல் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

சங்கர்
சங்கர்

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தல்படி, மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற கதிர்வேல், அங்கிருந்த வருவாய் உதவியாளர் சங்கரிடம் ரூ. 20 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சங்கர் தனது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார், சங்கரைப் பிடித்து கைது செய்ததுடன், பணம் ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். சொத்துவரி மாற்றத்துக்கு வருவாய் உதவியாளர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை ல... மேலும் பார்க்க

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.இ... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க