செய்திகள் :

கேரளா: "சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்" - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

post image

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

கேரளாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வியூகம் வகுத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளின் பட்டியலைத் தயாரித்து களப்பணி செய்துவருகிறது பா.ஜ.க.

இதற்கிடையே கேரளாவில் 21 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்ற தனது ஆசையை மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசுவதற்காக கேரள மாநிலம் கொல்லத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சுரேஷ்கோபி கூறுகையில், "கேரளாவில் நிலம் ஒதுக்கீடு செய்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என நான் கூறவில்லை. அதே சமயம் வளர்ச்சிப் பணிகள் அதிகமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ள ஆலப்புழாவில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது 2015-ம் ஆண்டு முதல் எனது கருத்தாக உள்ளது.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இன்றைய சூழ்நிலையில் ஆலப்புழாவில் இடம் தரவில்லை என்றால் திருச்சூரில் இடம் வாங்கி எய்ம்ஸ் அமைக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனை

'எய்ம்ஸ் வருமடா மற்ற மோனே' என நான் கூறிய கருத்துக்குத் தவறான விளக்கம் அளித்து கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். என்னை விமர்சித்தவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்குப் பதில் மற்ற மோனே எனக் குறிப்பிட்டேன். தேர்தல் நெருங்குவதால் நான் பேசியதைத் திரித்து கூறுகின்றனர்.

வரும் சட்டசபைத் தேர்தலில் 21 எம்.எல்.ஏ-க்களையாவது பா.ஜ.க-வுக்கு மக்கள் கொடுத்தால் கேரளாவில் பெரிய மாற்றம் உருவாகும். இந்தச் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை.

சுரேஷ்கோபி
சுரேஷ்கோபி

சபரிமலையில் புதிய கொடிமரம் அமைத்த சமயத்தில் ஒரு பக்தர் மூன்றரை கிலோ தங்கம் வழங்கினார். அதில் எனது வியர்வையின் பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் நான் சிறிது தங்கம் காணிக்கையாக வழங்கினேன். என்னிடம் இருந்த 22 கேரட் தங்கத்தை 24 கேரட்டாக மாற்றி வழங்கினேன்.

கொடிமரத்தின் மேல் உள்ள வாஜி வாகனத்தில் (குதிரை வாகனம்) நான்தான் தங்கம் பதித்தேன். அப்போது நான் வழங்கிய தங்கத்திற்கு ரசீது வழங்கியிருப்பார்கள். நான் அந்த ரசீதைப் பாதுகாத்து வைக்கவில்லை" என்றார்.

'வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!' - 'சின்னம்மா' முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!

சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கப்போவதாக கூறியிருக்கும் சசிகலா, இரண்டு நாட்களாக போயஸ்கார்டனில் தனது ஆதரவாளர்களையும் அம்மா தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். சசிகலாவின் நேற்றைய சந்தி... மேலும் பார்க்க

குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி க... மேலும் பார்க்க

புதுச்சேரி: போலீஸ் தடியடி... எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! - நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம்புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள... மேலும் பார்க்க

விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல்

அதிமுக Vs அமமுக மல்லுக்கட்டுதேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்த அமமுக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அல்லது மடத்துக்குளம் தொகுதியில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்... மேலும் பார்க்க