செய்திகள் :

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

post image

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் தூக்கிப்போட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள சுகேத் என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்ததை அதன் உரிமையாளர் பார்த்தார். இது குறித்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த உடலில் கால்கள் கட்டப்பட்டு இருந்தது.

இதனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று போலீஸார் கருதினர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். புனே அருகில் உள்ள கேட்-சிவாபூர் டோல்கேட்டில் ஆய்வு செய்யப்பட்டதில் புனேயில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அக்காரின் உரிமையாளர் யார் என்று ஆய்வு செய்தபோது அது பந்துவிற்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

முக்கோண காதல்

பந்துவை பிடித்துச்சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் மழுப்பலாக பதிலளித்தார். ஆனால் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் சோம்நாத் என்றும், அவர் மும்பை அருகில் உள்ள கலம்பொலியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பந்து காதலிக்கும் பெண்ணை சோம்நாத்தும் காதலித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. பந்து இப்பிரச்னை குறித்து பேச சோம்நாத்தை அழைத்தார். சோம்நாத் வந்தபோது அவரை காருக்குள் அழைத்தனர்.

காரில் ஏற்கனவே அவரது நண்பர்கள் விஜய், கிரன், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சோம்நாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை மறைப்பதற்காக அவர்கள் காரிலேயே சதாராவிற்கு எடுத்து சென்றதாக பந்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சோம்நாத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் டாக்சி ஓட்டி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க