செய்திகள் :

ஜனநாயகன்: "இதே நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்?" - தொடங்கியது மேல்முறையீடு விசாரணை

post image

ஜனநாயகன்: "இதே நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்?" - தொடங்கியது மேல்முறையீடு விசாரணை

மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பட்டியலிடப்பட்டது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீதிபதி, ``இதே நாளில் மேல்முறையீடு (appeal) தாக்கல் செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ASG துஷார் மேத்தா, ``தயவுசெய்து அந்த உத்தரவைப் பாருங்கள். மனு 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது 6ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் வந்தது. அப்போது கடிதத்தை சமர்ப்பிக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை 7ஆம் தேதி நாங்கள் சமர்ப்பித்தோம்" என பதிலளித்தார்.

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார்.

ஜனநாயகன்

இன்று தீர்ப்பு

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார்.

அதிகாரம் இல்லை

அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `என் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் என் கருத்தை குழுவில் பரிசீலிக்கவில்லை' என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

உடனே மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர்.

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. "எந்த மொழியில் உங்களுக்கு ஆள... மேலும் பார்க்க

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் க... மேலும் பார்க்க

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவ... மேலும் பார்க்க