செய்திகள் :

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த்

post image

ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels)

இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர்.

யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது.

Vowels movie
Vowels movie

அப்போது பேசிய சின்னி ஜெயந்த் "இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். கதா சங்கமம் என்ற கன்னட படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். புட்டண்ணா கனகல் இயக்கினார். அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த படத்தை தமிழகத்தில் இந்த விழா நடக்கும் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது.

தமிழக ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் 'என்டர் தி டிராகன்' படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது.

தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது.

இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க வேண்டும். 5 கதைகளை விரிவாக எடுக்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளியான யூகி சேது இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.

சின்னி ஜெயந்த்
சின்னி ஜெயந்த்

1980களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம். நடிக்க சான்ஸ் கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டே இருக்கலாம். இப்ப, நடிக்க வாய்ப்பு டக்கென கிடைக்கிறது.

ஆனால் தொடர்ந்து நடிக்க, ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பல படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தில் நானே காதலித்து இருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த '... மேலும் பார்க்க

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது..."திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள்... மேலும் பார்க்க

`செக் கொடுத்து, யோகி பாபு சார் சொன்ன விஷயம்' - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மனைவி தனிஷ் பாத்திமா

' ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கியிருக்கிறார் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் 'கெணத்த கா... மேலும் பார்க்க