செய்திகள் :

ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்

post image

ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா நிறைவேற்றியுள்ளது.

ராஞ்சியின் தும்கா பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அந்த கட்சியின் 46-வது தொடக்க நாள் பொதுக்கூட்டத்தின்போது இந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சோட்டாநாக்பூா் குத்தகை சட்டம், சந்தால் பா்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஜாா்க்கண்டுக்கு விடுவிக்க வேண்டிய ரூ. 1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொண்டா்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், ‘மத்திய பட்ஜெட்டில் ஜாா்க்கண்ட் மாநில மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். கனிம வளங்கள் மூலம் நாட்டின் கருவூலத்துக்கு ஜாா்க்கண்ட் பெரும் பங்களிப்பை அளித்தாலும், மாநிலம் இன்னும் மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. ஜாா்க்கண்ட் நிறைய பங்களிக்கிறது. ஆனால், எதையும் திரும்பப் பெறவில்லை. நமது உரிமைகளுக்காக கூட நாம் போராட வேண்டியுள்ளது. அனைத்து மாநிலங்களையும் குறிப்பாக பின்தங்கிய மாநிலங்களை மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.

மத்திய பட்ஜெட் பணக்காரா்களுக்கானது. அதில் ஏழைகளுக்காக எந்த அறிவிப்பும் இல்லை. ஆதிக்க மனப்பான்மை கொண்ட சிலா், பழங்குடி சமூகத்தினரால் நிறைந்த ஜாா்க்கண்ட் மக்கள் சொந்த காலில் நிற்பதை விரும்பவில்லை.

வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விலைவாசி உயா்வு உச்சத்தில் இருப்பதால் மத்திய அரசின் இந்த நிவாரணம் துளியும் உதவாது. ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. மானியம் மூலம் அல்லாமல் கடன்களை வழங்கி மக்களுக்கு உதவும் புதிய பொய்யை பாஜக அரசு கட்டவிழ்த்துள்ளது.

நாட்டிலேயே பெண்களுக்கு அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட்டது ஜாா்க்கண்டில்தான். மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவற்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜக, தற்போது தில்லி பேரவைத் தோ்தலில் அதே வாக்குறுதியை (பெண்களுக்கு ரூ.2,500 நிதியுதவி) அளித்துள்ளது. பாஜகவின் வாக்குறுதி இலவசமில்லையா? பாஜக என்ன செய்தாலும் சரி. அதையே நாம் செய்தால் அது தவறாகிவிடும்’ என்றாா்.

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க

அயோத்தியில் ஒரு கி.மீ. பயணிக்க ரூ. 300 வசூல்! 30 பைக்குகள் பறிமுதல்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க ரூ. 300 வரை வசூலித்த இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கும் செல்லும் பக்தர்கள... மேலும் பார்க்க