செய்திகள் :

"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" - தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

post image

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது.

தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் கேட்டிருக்கிறார்களாம்.

சங்கத் தலைவர் பரத்திடம் பேசினோம்.

பரத்
பரத்

''தமிழ் சீரீயல்களை நம்பி ஆயிரக்கணக்கான ஆர்ட்டிஸ்டுகள் இங்க இருக்காங்க. ஒவ்வொரு சேனலையும் எடுத்துகிட்டா தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகுதுங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு தேதியில ஒளிபரப்பாகுற முக்கிய சீரியல்களை எடுத்துப் பாருங்க, ஹீரோ ஹீரோயின் எல்லாருமே கேரளா, கர்நாடகான்னு பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவங்களாகவே இருக்காங்க.

இங்க ஹீரோ ஹீரோயினா நடிக்க ஆளுங்களே இல்லையா? கேட்டா, சீரியல் தயாரிப்பு பெரிய பிசினஸ், அதுல யாரை நடிக்க வைக்கணும்னு எங்களுக்குத் தெரியும்னு சொல்வாங்க.

நாங்க என்ன சொல்றோம்னா, ஹீரோ, ஹீரோயின் கூட நீங்க வெளியில இருந்து கூட்டி வந்துக்கோங்க, அவங்களைத் தவிர சீரியல்ல மத்த கேரக்டர்கள் இருப்பாங்களே, அந்தக் கேரக்டர்களையாச்சும் இங்க இருக்கிறவங்களுக்குக் கொடுங்கனுதான்.

Zee television
Zee television

கர்நாடகாவுல எல்லாம் மத்த மாநிலங்கள்ல இருந்து குறைந்த எண்ணிக்கையில வேணும்னா மத்த மாநிலங்கள்ல இருந்து ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்ய அனுமதிக்கறாங்க. அப்படி நடிக்கிறவங்களும் கன்னட மொழியைக் கண்டிப்பா கத்துக்கணும்.

இங்க அந்த மாதிரி எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால்தான், தமிழ் சீரியல் நடிகர் நடிகைகள் வாய்ப்பு இல்லாம கஷ்டப் படுறாங்க" என்றவரிடம்,

ஜீ தமிழை மட்டும் குறி வைத்து கேட்பது ஏன் எனவும் கேட்டோம்.

"சன், விஜய் டிவிக்கள்ல ஜீ தமிழ்ல இருக்கிற அளவக்கு அதிகமான ஆர்ட்டிஸ்டுகள் கிடையாது.

ஜீ தமிழ் சேனலில் இன்னைக்கு ஒளிபரப்பாகிற சீரியல்களில் அதிக எண்ணிக்கையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்ட்டிஸ்டுகள் இருக்காங்க. அதனாலதான் இப்படியொரு கடிதம் எழுத வேண்டி வந்தது

முதல்கட்டமா கடிதம் தந்திருக்கோம். அவங்களுடைய பதில் நடவடிக்கையைப் பொறுத்து எங்களுடைய அடுத்த மூவ் இருக்கும்" என்கிறார்.

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீ... மேலும் பார்க்க

BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது.பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷன... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மன் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; "இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம்" - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார்.BB Tamil 9இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க