'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?
'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி
அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்தத் திட்டம் குறித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்தும் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
"அமெரிக்கா உண்மையான ஆற்றல் ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது! கடந்த 50 ஆண்டுகளில், டெக்சாஸ் பிரவுன்ஸ்வில்லேயில் முதல்முறையாக முதல் அமெரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் - அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம். இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், ஆற்றலுக்கும், தெற்கு டெக்சாஸ் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி.

ரிலையன்ஸிற்கு நன்றி
இப்படியான மிகப்பெரிய முதலீட்டிற்கு இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கும், இந்தியாவின் தனியார் ஆற்றல் நிறுவனமான ரிலையன்ஸிற்கும் நன்றி.
'அமெரிக்கா ஃப்ரஸ்ட்' என்கிற நம்முடைய கொள்கைகளாலும், அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல், வரிகளைக் குறைத்தல் போன்ற காரணங்களால், பில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்பந்தம் நமது நாட்டிற்கு மீண்டும் திரும்புகின்றன.
இது தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம்
இந்த நிலையம் அமெரிக்காவின் சந்தையை ஊக்குவிக்கும்... நமது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர்கள் வந்து சேரும்.
இது உலகிலேயே சுத்தமான சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும்.
மேலும், இது ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அந்தப் பகுதியில் வளர்ச்சி உண்டாகும்.
இப்படித் தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம் இருக்கும்". எனக் குறிப்பிட்டுள்ளார்.




















