செய்திகள் :

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

post image

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக வலியுறுத்த, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

மதிமுக உயர்நிலைக் குழு
மதிமுக உயர்நிலைக் குழு

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மதிமுகவியின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்திருந்தது. கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க கூடிய இந்த கூட்டத்துக்கு வருகை தந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்' என கூறிவிட்டு சென்றார்.

அவர் பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. ஆனால், எங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தயிருக்கிறார்கள். திமுக அவர்களின் சூழ்நிலையை எங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இப்போது மேலும் சிலர் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

துரை வைகோ
துரை வைகோ

மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. இயக்கத்தின் நலனை விட தமிழகத்தின் நலனை முக்கியம். சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை' என்றார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்றும், கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தின் தான் நிற்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது.

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க

மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: 3 நாள்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! | கள நிலவரம் என்ன?

தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்... மேலும் பார்க்க

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09

எம்ஜிஆர், ஜெ. சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா?‘வாவ்’ வியூகம் 09திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தது போல், அதிமுக... மேலும் பார்க்க

​கேரளம்: "அந்த அழைப்புக்காகத்தான் நான் காத்திருந்தேன்" - அமைச்சர் மீது புகார் கூறிய மனைவி சமரசமானார்

கேரள மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் நேற்று சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாலகத்தில் உள்ள குடும்ப வீட்டுக்குக் கடந்த 7-ம் தேதி சென்றபோத... மேலும் பார்க்க