செய்திகள் :

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' - வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

post image

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் முன்பணம் செலுத்தி, மண்டபத்தை புக் செய்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் சாதி குறித்து மண்டப உரிமையாளர் ரவி என்பவர் விசாரித்திருக்கிறார்.

பெருந்துறை ஸ்டேஷன்

பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பெண்மணி உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ரவி, சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்டதுடன், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் வாடகைக்கு விடுவதில்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அவமானத்தால் மனமுடைந்த அந்தப் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பல தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக மண்டப உரிமையாளர் ரவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமாக உடல்நிலையைக் காரணம் காட்டி ரவியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

``சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவியை, காவல்துறை கைதுசெய்யாமல் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக" பட்டியல் சமுதாய மக்களுக்கான ஆதரவு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

டால்பின் திருமண மண்டபம்

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகநீதி மக்கள் கட்சியினர், ``பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் வாடகைக்குத் தர முடியாது என பட்டவர்த்தனமாகச் சொல்கிறார்கள். இதனை தட்டிக்கேட்க வேண்டிய பெருந்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் கும்பங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனி சைபர் பிரிவு போலீஸ் படையை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.Murderகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரு... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்... மேலும் பார்க்க

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம... மேலும் பார்க்க