செய்திகள் :

டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

post image

கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்பியன் லீக்-2025 என்ற தலைப்பில் கடந்த 2 மாதங்களாக நடத்தி வந்தது.

இதில் கிரிக்கெட், கைப்பந்து, தடகளப் போட்டிகள், வளைபந்து, டென்னிஸ், கேரம், சதுரங்கம், கூடைப்பந்து, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் உள்ளிட்டோ போட்டிகள் நடைபெற்றன.

இதில் வென்றோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

காகித நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா், முனைவா் சந்தீப் சக்சேனா, செயல் இயக்குநா் (இயக்கம்) யோகேந்திர குமாா் வா்சனே ஆகியோா் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினா்.

இதில் பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் மற்றும் அனைத்துப் பொது மேலாளா்கள், துணை பொது மேலாளா்கள், அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு

கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க

ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா!

ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

கிருஷ்ணராயபுரத்தில் ரூ.92 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்!

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.92.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. நொய்யல் அருகே 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் தெய்வமாக விளங்கும் சேமங்கி மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க