செய்திகள் :

தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

post image

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual General Meeting – AGM) 29.07.2026 அன்று மதுரையில் நடைபெற்றது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2025–26 நிதியாண்டிற்கான இயக்குநர்கள் அறிக்கை, தணிக்கையிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் வணிக செயல்திறன் குறித்து பங்குதாரர்களிடம் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, புதிய முயற்சிகள், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர், தரம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவையையே தங்கமயிலின் வளர்ச்சிக்கான அடித்தளமாக நிறுவனம் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இணை நிர்வாக இயக்குநர்களான திரு. Ba.ரமேஷ் மற்றும் திரு. N.B.குமார் ஆகியோர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி நோக்கு, வணிக விரிவாக்க உத்திகள், வாடிக்கையாளர் சேவை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பங்குதாரர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், நிறுவனச் செயலாளர் திரு. CS K. நாராயணன், தலைமை நிதி அதிகாரி Mr.B.ராஜேஸ்கண்ணா, நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், பொது மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் பல்வேறு தீர்மானங்கள் பங்குதாரர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சி, பங்குதாரர்களுக்கான மதிப்பூட்டல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து வரும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் அனைவருக்கும் நிறுவன நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!

ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போத... மேலும் பார்க்க

Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்த... மேலும் பார்க்க

`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர... மேலும் பார்க்க

`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

மண் கலயங்களின் விற்பனைதென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்ற... மேலும் பார்க்க

LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க