செய்திகள் :

தஞ்சாவூர்: ”உதயநிதியை வரவேற்க கொடி கம்பம் அமைக்கும் பணி”- மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சோகம்!

post image

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முதல்நிலை ஒப்பந்ததாரரும், திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினரான சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார் இல்ல திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். உதயநிதியை விமர்சையாக வரவேற்கும் விதமாக பல்வேறு எற்பாடுகளை செய்தார் சர்க்கரை ஆலை குமார்.

சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார்

இதே போல் ஒப்பந்த அடிப்படையில் சாலையில் இருபுறமும் கொடி மற்றும் தோரணம் அமைக்கும் பணி நடைபெற்றது. சேலத்தை சேர்ந்த பந்தல் அமைப்பு கம்பெனி இதற்கான பணிகளை செய்தது. நேற்று இரவு திருமண மண்டபம் அருகே இரும்பு குழாயில், திமுக கொடி கட்டி அதை ஊன்றும் பணியில் சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த கோகுல் 29, சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கார்த்தி 45, ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

கொடியை 30 அடி உயரம் கொண்ட இரும்பு கம்பியில் கட்டி கம்பத்தை ஊன்றியுள்ளனர். அப்போது உயர் அழுத்த மின்கம்பியில் இரும்பு கம்பம் உரசி மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகளால்... மேலும் பார்க்க

விடாப்பிடி திருநாவுக்கரசர்; பெண் வேட்பாளரை விரும்பும் அதிமுக; அறந்தாங்கி தொகுதி 'சீட் பிடி' களேபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி தொகுதி. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டியுள்ள இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.... மேலும் பார்க்க

Vijay: `அவர்கள் அப்படித்தான்' - தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த ந... மேலும் பார்க்க

`வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும்.!' அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்! | EP 4

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க