செய்திகள் :

'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்கு PCB எச்சரிகை

post image

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதே போல பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

தசுன் ஷனகா
தசுன் ஷனகா

ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற இருப்பதால் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் லீக்கை தவிர்த்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கை அணி வீரர் தசுன் ஷனகா பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரணுக்குப் பதிலாக ஆட இணைந்திருக்கிறார்.

தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (PCB)மொஹ்சின் நக்வி, " பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

ipl vs psl
ipl vs psl

கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ், கடைசி நேரத்தில் விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றார். அதற்காக அவருக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

அதே போன்ற கடுமையான நடவடிக்கை இந்த முறையும் எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' - சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! மேலும் பார்க்க

Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" - ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்... மேலும் பார்க்க

"மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்.!"- ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கா... மேலும் பார்க்க

IPL 2026: "CSK-வை விட மும்பை அணி தான் சிறந்தது, ஏனென்றால்..!"- முன்னாள் வீரர் இர்பான் பதான்

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது ... மேலும் பார்க்க

IPL : விற்பனைக்கு வரும் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.16,000 கோடியை நிராகரித்த RR!

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராய... மேலும் பார்க்க

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டி... மேலும் பார்க்க