செய்திகள் :

தங்க நகை வாங்க, வங்கியில் இருந்து பணத்தை எடுக்க.! பான் கார்டு விதிமுறை மாறுகிறதா? | Gold | PAN

post image

வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைவரும் அவசியம் தெரிந்துவைத்திருப்பது நல்லது. இல்லாவிட்டால், கடைசி நேரத்தில் நாம் பதற்றத்திற்கு உள்ளாக வேண்டி இருக்கும்.

வருகிற 1-ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பான விதிமுறைகள் எப்படி மாறப் போகின்றன?

டெபாசிட் திட்டம்

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது.!

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், பான் கார்டு தரவேண்டும் என்பது தற்போதுள்ள நடைமுறை ஆகும். ஆனால், வருகிற 1-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையின்படி, வங்கியில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும்போதுதான் பான் கார்டு எண் அவசியம் தரவேண்டும். அதற்குக் கீழே இருக்கும் தொகை அளவுக்கு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் பான் கார்டு எண் தரத் தேவை இல்லை என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது...

வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும்போது பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், பான் கார்டு எண் தரவேண்டும்.

பத்திரப் பதிவு

நிலம், மனை வாங்கும்போது...

நிலம் அல்லது மனை வாங்கும்போது, அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குமேல் இருந்தால், பான் கார்டு எண் தரவேண்டும் என்பது இப்போது வரை உள்ள விதிமுறை ஆகும். ஆனால், புதிய விதிமுறையின்படி,ரூ.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நிலம் மற்றும் மனைப் பரிவர்த்தனைக்கு பான் கார்டு எண் தர வேண்டியது அவசியம் ஆகும்.

ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும்போது...

ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும்போது ரூ.50 ஆயிரத்துக்குமேல் கட்டணம் கட்டும்போது பான் கார்டு எண் தரவேண்டியது அவசியம் என்கிற விதிமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இனி ரூ.1 லட்சத்துக்குமேல் கட்டணம் கட்டவேண்டி இருந்தால் மட்டுமே பான் கார்டு எண் தரவேண்டும் என புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

மோட்டார் இன்ஷூரன்ஸ்

மோட்டார் வாகனம் வாங்கும்போது....

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் வாங்கும்போது பான் கார்டு எண்ணைத் தருவது அவசியம் என்பது இன்றுள்ள விதிமுறை ஆகும். ஆனால், வருகிற 1-ஆம் தேதி முதல் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு மட்டும் (இரு சக்கர வாகனம் உள்பட) பான் கார்டு எண் தந்தால் போதும்.

இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது...

இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பிரிமீயம் கட்டினால் மட்டுமே பான் கார்டு எண் தர வேண்டும் என்று இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, அனைத்து இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே பான் கார்டு எண் தரவேண்டும்.

தங்க நகை

தங்க நகை வாங்கும்போது...

தங்க நகை வாங்கும்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கினால், பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய விதிமுறையைப் போலவே, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு மேல் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க நகை வாங்கினால், பான் கார்டு எண் தரவேண்டியது அவசியம் ஆகும்!

இந்த விதிமுறை நன்கு தெரிந்துவைத்துக் கொண்டால், எந்த விதமான குழப்பமும் இல்லாமல், பதற்றம் அடையாமல் இருக்கலாம்!

Labham

இதுபோன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.

''அய்யய்யோ, 1000 கிலோ வெள்ளி போச்சே...!'' கதறிய மனிதர்; என்னாச்சு அவருக்கு?

கொங்கு மண்டலத்தைச் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர்ராஜன். பரம்பரை பிசினஸ் குடும்பம். தன் அப்பா ராமமூர்த்தியைவிட சுந்தர்ராஜன் பிசினஸைச் சிறப்பாகச் செய்துவந்தார். விளைவு, அவர் செய்துவந்த பிசினஸ் பெர... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெற உதவும் 'செல்ப் லாக் இன்' சிஸ்டம்... ஏப்ரல் முதல்! - விவரம் என்ன?

நீண்ட கால முதலீடு என்பது பலருக்கும் சோதனையான விஷயம்தான். 10, 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்றுதான் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், முதலீடு நன்றாக போய்க் கொண்டிரு... மேலும் பார்க்க

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே - இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் 'பான்' கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் 'பான்' கார்டு எடுக்கவில்லை எனில், உட... மேலும் பார்க்க

இனி 10 இல்லை; 4 மட்டுமே.! மியூச்சுவல் ஃபண்டில் நாமினி பற்றி செபி கொண்டுவரும் அதிரடி மாற்றம்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பங்குச் சந்தை கட்டுபாட்டு வாரியமான செபி மீண்டும் அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி (வாரிசுதாரர்) தொடர்... மேலும் பார்க்க

ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை 'லட்சங்களாக' மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க... பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய ... மேலும் பார்க்க

TAX : நீங்கள் வரி சேமிக்கிறீர்களா அல்லது பணத்தை இழக்கிறீர்களா? | சிறப்பு நிகழ்ச்சி, மார்ச் 15

கவனியுங்கள்... மார்ச் மாதம் வந்துவிட்டாலே பலருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலிருந்து, "Investment Proof-ஐ சப்மிட் செய்யுங்கள், இல்லையென்றால் சம்பளத்தில் அதிக TDS பிடிக்கப்படும்" என... மேலும் பார்க்க