ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள் - பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற...
தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு - காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் என்ற இடத்தில் கம்லா தேவி (65) என்ற பெண் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து கமலா தேவியின் மருமகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. இதில் கமலா தேவி வீட்டிற்கு அவரது உறவுக்கார பெண் லலிதா என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர்தான் இக்கொலையில் தொடர்பு கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
லலிதாவும், அவரது காதலன் பப்லு என்பவரும் சேர்ந்து இரவில் இக்கொலையை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி இருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கொலையாளிகள் இரண்டு பேரும் முதலில் கொலைக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். கமலா தேவிக்கு லலிதா நெருங்கிய உறவு என்பதால் லலிதா அடிக்கடி கமலாதேவி வீட்டிற்கு சென்று வரக்கூடியவர் என்பதால் அவருக்கு வீட்டில் பணம், நகைகள் எங்கு இருக்கிறது என்று தெரிந்து இருந்தது.
திருமணமான லலிதாவும் அவரது காதலனும் தங்கள் ஆடம்பர வாழ்க்கை, பொழுதுபோக்கு மற்றும் பார்ட்டிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் அவர்கள் இரண்டு பேரும் மிகவும் தெளிவாக திட்டம் தீட்டி இக்கொலையை செய்துள்ளனர். திருடப்பட்ட தங்க வளையல்கள், தங்க காதணிகள், ஒரு மூக்குத்தி, வெள்ளி கொலுசுகள், வெள்ளி நாணயங்கள், பணம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் உட்பட திருடப்பட்டதில் கணிசமான பகுதியை போலீஸார் மீட்டனர். லலிதா மற்றும் அவரது காதலனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பேரையும் கைது செய்ய கண்காணிப்பு கேமராக்கள் தான் முக்கிய பங்கு வகித்தன.


















