செய்திகள் :

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

post image

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 114 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நேற்று முன் தினம் கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மறைத்ததாக புகார் எழுந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள்

இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது இப்பள்ளி வாக்குப்பதிவு மையமாக செயல்பட்டது. அப்போது தேர்தல் பணியாளர்கள் தங்குவதற்காக பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டதாகவும், அங்கு போதிய மின் வசதி இல்லாததால் தற்காலிகமாக மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த இணைப்பு வயர் அகற்றப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காற்றில் அசைந்த மின் வயர் சேதமாகி கழிப்பறை இரும்புக் கதவில் உரசியபடி இருந்ததால் சம்பவம் நடந்த அன்று அங்கு வந்த மாணவர்கள் 9 பேருக்கும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக தொப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதில் இரண்டு மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மின் இணைப்பை அகற்றாமல் ஆசிரியர்கள் அலட்சியம் காட்டியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்து பள்ளி முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார்.

இந்த சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைக்க நினைத்த தலைமை ஆசிரியர் குறித்து பெற்றோர் தரப்பில் புகார் எழுந்ததால் தருமபுரி கலெக்டர் சரவணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தலைமையாசிரியர் செந்தாமரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச... மேலும் பார்க்க

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.... மேலும் பார்க்க

கரூர்: காவிரியில் மூழ்கி மூவர் பலியான சோகம்; திதி கொடுக்கச் சென்றபோது விபரீதம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் - தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக... மேலும் பார்க்க

போக்சோ: சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - கடமைத் தவறிய 6 போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நட... மேலும் பார்க்க

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை ச... மேலும் பார்க்க