செய்திகள் :

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

post image

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், " நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் காலை 10.30 மணிக்கு நான் காவல் நிலையம் சென்றேன். விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்." என தெரிவிக்கப்பட்டது.

பழனி
பழனி

அரசுத் தரப்பில், " குறிப்பிட்ட இடம் பழனி மடத்திற்கு சொந்தமானது. அதனை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்பது தொடர்பான குறிப்புகள் இருந்தும் எப்படி பதிவு செய்தார்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "பொறுப்பு பதிவாளராக சென்றதால் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது" என தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள... மேலும் பார்க்க

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கர்நா... மேலும் பார்க்க

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக... மேலும் பார்க்க

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி ... மேலும் பார்க்க

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பள்ளி அருகில் வடாபாவ், சமோசா விற்க தடை; பிறந்தநாளில் சாக்லேட் வழங்கவும் கட்டுப்பாடு

மகாராஷ்டிராவில் புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் உணவகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில்... மேலும் பார்க்க