செய்திகள் :

தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி; யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அர்ச்சனா பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் பெண் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார் தலைமை தேர்தல் அர்ச்சனா பட்நாயக்.

யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

ஒடிசா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2002-ம் ஆண்டு பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். நீலகிரி மாவட்ட கலெக்டர், 1945- ம்‌ ஆண்டிற்குப் பிறகான கோவை மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர், தமிழ்நாடு தோட்டக்கலை ஆணையர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கடந்த 2024- ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அர்ச்சனா பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்

இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தேர்தல் தலைமை அதிகாரி என்கிற சிறப்புடன் தேர்தலை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதிலும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களைக் கண்டறிந்து, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் எழாமல் தேர்தலை நடத்த கூடுதல் கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" - சீமான்

தமிழகமெங்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வ... மேலும் பார்க்க

போதுமான ரயில், பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; பயணியின் அனுபவம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது. போதுமா... மேலும் பார்க்க

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க