செய்திகள் :

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை மாநகராட்சி

post image

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் காலை 9.30 மணி முதல் எல்.இ.டி. திரை வாயிலாக ஒளிபரப்பப்படும்.

சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுர பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், பாண்டி பஜாா் சாலை, வள்ளுவா் கோட்டம், கத்திப்பாரா பூங்கா, மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை, டைடல் பாா்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாா்ச் 15-ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற பட... மேலும் பார்க்க

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் பதுங்கியிருந்த ரெளடியைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி ப... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

மூன்று நாள் பயணமாக தில்லி சென்ற ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினாா். நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஆளுநா் செவ்வாய்க்கிழமை தில்லி சென்றாா். தில்லி... மேலும் பார்க்க

மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு சிறப்பு போட்டித் தோ்வு ஏப்ரல் இறுதிக்குள் அறிவிப்பு

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யும் சிறப்பு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிடப்படும் என சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வி... மேலும் பார்க்க

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும்: 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் - அமைச்சா் கே.என்.நேரு உறுதி

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே... மேலும் பார்க்க