செய்திகள் :

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

post image

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரான சந்தோஷ(45), மனைவி சரண்யா (36), 9 ஆம் படித்து வந்த மகள் சாத்விகா (14) ஆகியோருடன் தருமபுரி கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல மகள் சாத்விகாவை பள்ளியிலிருந்து அழைத்து வந்த சந்தோஷ், பின்னர் வீட்டில் வைத்து மனைவி, மகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.

சந்தோஷ் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண்யா, சாத்விகா, சந்தோஷ்
சரண்யா, சாத்விகா, சந்தோஷ்

இதற்கிடையே சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தகவல் வர, அங்கு சென்ற போலீசாருக்கு தற்கொலை செய்து கொண்டது சந்தோஷ் என்பது தெரிய வந்தது.

மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ், திமுக பிரமுகராகப் பலருக்கும் அறிமுகமாகனவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மனைவி, மகளுடன் எடுத்துக் கொண்ட படம் அவரது வீட்டில் மாட்டப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவருக்கு இடையில் தொழில் நஷ்டம் அடைந்ததாகவும், அதன் காரணமாக அதிக அளவில் கடன் வாங்கி, கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு உண்மையான காரணத்தைப் பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் தருமபுரி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்... மேலும் பார்க்க

கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்... மேலும் பார்க்க

கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? - சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது. மிக சரியாக 13 விநாடிகள் ஓடும... மேலும் பார்க்க

Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? - போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கிரிக்கெட் நட்சத்திரம் சஷாங் சிங் வீட்டில் சமையல்காரராக வேலை செய்தவர் விபேந்திரா சிங் தோமர் (31). இவர் போபால் காவல் நிலையத்தில் சஷாங் சிங் மீதும், அவரின் தந்தை மீது புகார... மேலும் பார்க்க

சென்னை: ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் - மனைவியைக் கொலைசெய்த வழக்கில் இளைஞர் கூறிய `பகீர்' தகவல்!

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். பின்னர் ரேஷ்மாவும், வெங்கடே... மேலும் பார்க்க