செய்திகள் :

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

post image

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரான சந்தோஷ(45), மனைவி சரண்யா (36), 9 ஆம் படித்து வந்த மகள் சாத்விகா (14) ஆகியோருடன் தருமபுரி கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல மகள் சாத்விகாவை பள்ளியிலிருந்து அழைத்து வந்த சந்தோஷ், பின்னர் வீட்டில் வைத்து மனைவி, மகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.

சந்தோஷ் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண்யா, சாத்விகா, சந்தோஷ்
சரண்யா, சாத்விகா, சந்தோஷ்

இதற்கிடையே சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தகவல் வர, அங்கு சென்ற போலீசாருக்கு தற்கொலை செய்து கொண்டது சந்தோஷ் என்பது தெரிய வந்தது.

மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ், திமுக பிரமுகராகப் பலருக்கும் அறிமுகமாகனவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மனைவி, மகளுடன் எடுத்துக் கொண்ட படம் அவரது வீட்டில் மாட்டப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவருக்கு இடையில் தொழில் நஷ்டம் அடைந்ததாகவும், அதன் காரணமாக அதிக அளவில் கடன் வாங்கி, கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு உண்மையான காரணத்தைப் பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் தருமபுரி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க