செய்திகள் :

தவெக ஆட்சியமைக்க ஆதரவு ஏன்? - "எங்களை மதித்து அழைத்ததால்..." - கார்த்தி சிதம்பரம் விளக்கம்

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "தமிழ்நாடு மக்கள் வாக்களித்துவிட்டார்கள். மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கொடுக்கவில்லை.

ஒரு கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியிருக்கிறார்கள். 108 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். தற்போது எங்களின் ஆதரவை விஜய் கேட்டிருந்தார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

எங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக மதசார்பற்ற அரசாங்கம் அமைய த.வெ.கவுக்கு ஆதரவு தந்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு கட்சிகள் ஒரு நிலைபாட்டில் இருப்பார்கள்.

தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர் எதிராக நின்றவர்கள் கூட ஒரு கூட்டணி அமைப்பார்கள். விஜய் எங்களை மதித்து அழைத்ததால் நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க