செய்திகள் :

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

post image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய எம். ஆர்.விஜயபாஸ்கர், "இயக்கத்தை அமைத்த இரண்டே ஆண்டுகளில் முதல்வர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அம்மா போராடினார். அவரது மறைவிற்கு பிறகு இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடியவரை நாங்கள் எல்லோரும் தான் தேர்வு செய்தோம்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

ஆனால் அவரின் தவறான முடிவுகளால் இந்த இயக்கம் தள்ளாடி கொண்டிருக்கிறது. எங்களை துரோகி என்று சொல்கிறார். ஆனால் உண்மையில் யார் துரோகி என்று உங்களுக்கு தெரியும். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது சரியா?

42 ஆண்டுகள் அதிமுகவில் உறுப்பினராக இருந்து 22 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்தவன் நான். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு 5 ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தேன். கரூர் என்று சொன்னாலே உங்களுக்கு தெரியும்.

தவெக வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி. தளபதி கரூர் வரும்போது 41 உயிர்கள் பறிப்போனது. 234 தொகுதிகளிலும் உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக கரூர் இருக்கிறது. ஏன்னென்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், பணத்திமிரை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர்

ஆனால் நாங்கள் தவெகவில் இன்று இணைந்திருக்கிறோம் என்று சொன்னால் அரசியல் நிலை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். ஒரு தலைவர் சரியாக இல்லை என்றால் அந்த இயக்கம் எப்படிப் போகும் என்பதற்கு அதிமுக ஒரு உதாரணம். இனிமேல் தமிழகத்தில் புரட்சி தளபதி ஆட்சிதான். இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக உழைப்போம்" என்று சொல்லி இணைப்பு விழாவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் திம... மேலும் பார்க்க

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க