செய்திகள் :

'ரகசிய ஷேவிங், பாலியல் ஆசைக்கு மறுப்பு' - பெண் வேடமிட்டு ஆணை மணந்த நபருக்கு நடந்த விபரீதம்

post image

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தனர். பியூஷுடன் அவரது மனைவி மத ரீதியான விரதங்களைக் காரணமாகக் கூறி, உடல் ரீதியான நெருக்கத்தைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக நெற்றியில் குங்குமம் இட்டு பியூஷ் மனைவி வாழ்ந்தார்.

ஆனால் பியூஷ் தனது மனைவி வீட்டில் ரகசியமாக முகச்சவரம் செய்வதைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மனைவி உண்மையில் ஒரு ஆண் என்பதையும், அவர் ஒரு ஓரினச்சேர்க்கை உறவை விரும்புபவர் என்பதையும் பியூஷ் அப்போதுதான் கண்டுபிடித்தார்.

இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பெண்ணாக வாழ்ந்த நபரின் பெயர் சந்தன் என்று தெரிய வந்தது. இச்சண்டையால் அவர்கள் பியூஷ், சந்தனை விட்டு பிரிந்து சென்றார். ஆனால் பியூஷ் செல்லும் இடமெல்லாம் சந்தன் சென்றார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என்று விரட்டிசென்று இறுதியாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பியூஷை சந்தன் கண்டுபிடித்தார். பியூஷ் வேலை செய்த இடத்தில் சென்று சந்தன் வாக்குவாதம் சென்றார். இதையடுத்து சந்தனை பியூஷ் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத ரயில் தண்டவாளம் இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சந்தனை மிகப்பெரிய கல் ஒன்றை எடுத்து தாக்கி பியூஷ் கொலை செய்தார். பின்னர் உடலை அங்கிருந்த பாறை மறைவில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் இரண்டு நாள்கள் கழித்த நிலையில் சந்தன் உடல் அழுகிய நிலையில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தன் பெண்கள் அணியும் ஆடையை அணிந்தபடி இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கு பியூஷ் மற்றும் சந்தன் வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பியூஷைப் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். சந்தன், பீகாரைச் சேர்ந்தவர் ஆவார்.

புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது!

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும்போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். தொடர்ந... மேலும் பார்க்க

`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!'- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்

கர்நாடகா மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் உள்ள ஹனாசி என்ற கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் பிரியங்கா என்ற செவிலியரை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தார். மல்யுத்த வீரரான பசவராஜ் திருமணமான சில மாதங்களில... மேலும் பார்க்க

"ஸாரி அப்பா, அம்மா... செல்போனில் ஆதாரங்கள் உள்ளன" - போதை கணவரால் துயர முடிவை எடுத்த இளம்பெண்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ்(32). இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த நாகராஜன் - கலா தம்பதியரின் மகள் விக்னேஸ்வரி (27) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

தவெக MLA இளையராஜாவிடம் பேரம் பேசியது என்ன... சிக்கும் திமுக பிரமுகர்கள்? - யார் இந்த திருநாவுக்கரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவர், 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் யூடியூபரும் தேர்தல் வியூ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை ... மேலும் பார்க்க