செய்திகள் :

`தவெக-வில் இணைய காரணம் இதுதான்..!' - அதிமுக-விலிருந்து விலகிய இசக்கி சுப்பையா

post image

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் நேற்று (மே.25) இணைந்தனர்.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.கவில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து பேசிய இசக்கி சுப்பையா, "என் தொகுதி மக்களின் நலனுக்காகத் தான் நான் என் பதவியை ராஜினாமா செய்தேன்.

தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா
தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா

கடந்த 5 வருடங்களாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னால் எந்தவிதமான நலத்திட்டங்களையும் அங்கு கொண்டு வர முடியவில்லை.

குறிப்பாக முன்னாள் முதல்வர் தொகுதிக்கான கோரிக்கையை கேட்டார். ஆனால் கோரிக்கையை கொடுத்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் தொகுதி மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சி ஆதரவோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிச்சயம் நல்லது செய்ய முடியும்.

அதன் அடிப்படையில் தான் த.வெ.க பொதுச்செயலாளரை சந்தித்தேன். என் மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

யாரிடமாவது பணம் வாங்கியிருக்கிறேன் என்று யாராவது சொன்னால் இப்போதே அரசியலை விட்டு விலகி விடுகிறேன். தற்போது இருக்கும் முதல்வர் மக்களுக்கு நல்லதை செய்வார் என்ற நம்பிக்கையோடு அவருடன் பயணிக்க நான் வந்திருக்கிறேன்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப்படுமா? குதிரைபேரம் என்றால் என்ன? இரவெல்லாம் சிந்தித்தேன். பதில் கிடைக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க