செய்திகள் :

'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய் ஆலுக்காஸ்

post image

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையும், கல்யாண் ஜுவல்லர்ஸும் பெற்றுள்ளன.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’
‘தாய் மாமன் தங்க மோதிரம்’

ஜாய் ஆலுக்காஸும், கல்யாண் ஜுவல்லர்ஸும்

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்துச் செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS-தரமுத்திரை போன்ற அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்திருந்தது.

அடுத்ததாக, ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்கக் கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டுமே இசைவு தெரிவித்திருந்தது.

ஆகையால், இந்த இரு நிறுவனங்களுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் சென்றுள்ளது.

எழும் விமர்சனங்கள்

2010 காலக்கட்டங்களில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தூதராகத் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் இருந்தார். ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் இணை நிறுவனங்கள் ஆகும்.

இதனால், தமிழ்நாடு அரசின் திட்டம் ஜாய் ஆலுக்காஸிற்குக் கிடைத்திருப்பது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

ஜாய் ஆலுக்காஸ் பதிவு

இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கான டெண்டர் கிடைத்திருப்பது குறித்து, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“தமிழ்நாட்டின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்’ நாங்களும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறோம்.

ஜாய் ஆலுக்காஸ்
ஜாய் ஆலுக்காஸ்

எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல; சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் எண்ணத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் சார்பில் வழங்கப்படும் ஒவ்வொரு மோதிரமும் அதன் தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றுக்கான எங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி - ட்ரம்ப் சந்திப்பு: செய்தியாளர் கேள்வி-பதில் 'நோ' சொன்ன இந்தியா; மறந்துப்போன ட்ரம்ப், பிறகு.?

இந்தியப் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ இதற்கு நேர் எதிர்.தினமும் அவர் எப்படியாவது செய்தியாளர்களைச் சந்தித்துவிடுவார்.கடந்த ஜூன் மாதம் பிரான்சில் ஜி7 உச... மேலும் பார்க்க

``TVK-வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி!" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச... மேலும் பார்க்க

‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், “பல்வேறு செய்திகளி... மேலும் பார்க்க

'விவசாயிகள்தான் முதுகெலும்பு; பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து' - முதல்வர் விஜய் அறிவிப்பு!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்துக்கு முன்பு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமாக பரந்தூர் விமான நி... மேலும் பார்க்க

``கேரள பாஜக-வில் இருந்து விலகி..! ; தவெக-வில் இணைய சொல்லி விஜய் கேட்டார்" - நடிகர் தேவன்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன். 2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் த... மேலும் பார்க்க

TN Assembly: "மூன்று சிலிண்டர்கள் இலவசம்; பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது!" - முதல்வர் விஜய் அதிரடி| Live

வெற்றிப் பயணத் திட்டம்மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நகர, மாநகர பேருந்துகளில் 40 கி.மீக்கு மிகாமல் மட்டுமே பயணம் கொடுக்கப்படுகிறது. அதை விரிவுப்படுத்தப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த வெற்... மேலும் பார்க்க