செய்திகள் :

மோடி - ட்ரம்ப் சந்திப்பு: செய்தியாளர் கேள்வி-பதில் 'நோ' சொன்ன இந்தியா; மறந்துப்போன ட்ரம்ப், பிறகு.?

post image

இந்தியப் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ இதற்கு நேர் எதிர்.

தினமும் அவர் எப்படியாவது செய்தியாளர்களைச் சந்தித்துவிடுவார்.

கடந்த ஜூன் மாதம் பிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. அதில் மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.

அந்த உச்சிமாநாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றைத் தற்போது பகிர்ந்துள்ளார் செர்ஜியோ கோர்...

செர்ஜியோ கோர் (Sergio Gor) தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த இவர், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முக்கியப் பணியோடு புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி - செர்ஜியோ கோர்
மோடி - செர்ஜியோ கோர்

“உண்மையைச் சொல்லப்போனால், எங்கள் அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள ஆழமான, தனிப்பட்ட நட்பு எனது பணியை மிகவும் எளிதாக்கியுள்ளது.

நீங்கள் ஊடகங்களில் பார்த்தது போலவே, அது மிகவும் இயல்பான ஒரு பிணைப்பு.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜி7 உச்சிமாநாட்டிற்கு அதிபர் ட்ரம்புடன் நான் சென்றிருந்தபோது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.

நாங்கள் மேடைக்குப் பின்னால் இருந்தபோது, ஒரு கட்டத்தில் அதிபரும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம்.

அப்போது அவர் என்னிடம், ‘இந்தியத் தரப்பில் என்னென்ன விஷயங்களைப் பேசப்போகிறார்கள்?’ என்று கேட்டார். நாங்கள் சில தலைப்புகளைப் பற்றி விவாதித்தோம்.

பிறகு அவர், ‘அவர்கள் தரப்பில் ஏதேனும் கோரிக்கைகள் இருக்கிறதா?’ எனக் கேட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஒரே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது ‘செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கலாம், ஆனால் கேள்வி-பதில் நேரத்துடன் கூடிய முழுமையான செய்தியாளர் சந்திப்பாக அது இருக்கக் கூடாது’ என்பதுதான் அது.

அதை நான் அதிபரிடம் கூறியதும், ‘கண்டிப்பாக, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டார்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

பிறகு கூட்டம் தொடங்கியது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கேமராக்களுடன் செய்தியாளர்கள் உள்ளே வந்தார்கள்.

ஒருபுறம் அதிபரும், மறுபுறம் பிரதமரும் அமர்ந்திருந்தனர். இருவருமே சில நிமிடங்கள் பேசினார்கள். பேசி முடித்த அடுத்த கணமே, அதிபர் செய்தியாளர்களைப் பார்த்து, ‘ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?’ என்று வழக்கம் போல் கேட்டுவிட்டார்!

அவ்வளவுதான், அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 45 நிமிடங்களுக்கு அனைத்து விஷயங்களைப் பற்றியும் திறந்த மனதோடு பேசக்கூடிய ஒரு செய்தியாளர் சந்திப்பாகவே அது மாறிப்போனது.” என்றிருக்கிறார்.

'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய் ஆலுக்காஸ்

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ... மேலும் பார்க்க

``TVK-வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி!" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச... மேலும் பார்க்க

‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், “பல்வேறு செய்திகளி... மேலும் பார்க்க

'விவசாயிகள்தான் முதுகெலும்பு; பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து' - முதல்வர் விஜய் அறிவிப்பு!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்துக்கு முன்பு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமாக பரந்தூர் விமான நி... மேலும் பார்க்க

``கேரள பாஜக-வில் இருந்து விலகி..! ; தவெக-வில் இணைய சொல்லி விஜய் கேட்டார்" - நடிகர் தேவன்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன். 2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் த... மேலும் பார்க்க

TN Assembly: "மூன்று சிலிண்டர்கள் இலவசம்; பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது!" - முதல்வர் விஜய் அதிரடி| Live

வெற்றிப் பயணத் திட்டம்மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நகர, மாநகர பேருந்துகளில் 40 கி.மீக்கு மிகாமல் மட்டுமே பயணம் கொடுக்கப்படுகிறது. அதை விரிவுப்படுத்தப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த வெற்... மேலும் பார்க்க