செய்திகள் :

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

post image

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப்பிய கணவனின் நாக்கை மனைவி கடித்து துப்பி இருக்கிறார்.

காசியாபாத் என்ற இடத்தில் உள்ள சஞ்சய்புரி என்ற இடத்தில் வசித்து வருபவர் விபின். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு விபினுக்கு இஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது.

விபின் வீடு சிறியதாக இருந்ததால் ஏற்கனவே இருந்த வீட்டிற்கு மேலே ஒரு மாடி கட்டி அதில் விபின் தனது மனைவியோடு வசித்து வந்தார். இது குறித்து விபின் தாயார் கீதா கூறுகையில், ''திருமணமான சில நாட்களில் இஷா தனது விருப்பப்படிதான் இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

கைதான இஷா

அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினாலும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதோடு ரகசியமாக மது அருந்துவது மற்றும் சிகரெட் புகைப்பது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். இதற்கு எனது மகன் எதிர்ப்பு தெரிவித்தபோது வீட்டை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டினார்''என்றார்.

முட்டை கறி குறித்து கேள்வி எழுப்பிய கணவன்

சம்பவத்தன்று இரவு விபின் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்து சாப்பிட அமர்ந்தபோது முட்டை குழம்பு இருந்தது. தினமும் முட்டை குழம்புதானா என்று விபின் தனது மனைவியிடம் கேள்வி எழுப்பினார். அதோடு தினமும் முட்டை குழம்பு சாப்பிட்டு வெறுத்துவிட்டது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இஷாவின் மது குடிக்கும் பழக்கம் குறித்து விபின் பேசினார். பிரச்னைக்கு தீர்வு காண சிக்கன் குழம்பு ஆர்டர் பண்ணி சாப்பிடலாமா என்று இஷா தெரிவித்தார்.

அதோடு தனது படுக்கையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை இஷா வெளியில் எடுத்தார். அதற்கு விபின் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்குள் நடந்து வந்த வாக்குவாதம் இரவு 11 மணி வரை நீடித்தது. இறுதியில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

கணவன் நாக்கை கடித்த மனைவி

இந்த சண்டை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில் பல முறை இஷா தனது கணவனை அடித்தார். விபின் தனது மனைவியை அமைதிப்படுத்த முயன்றார். இதில் சமாதானம் ஆவது போன்று நடந்து கொண்ட இஷா திடீரென தனது கணவனின் நாக்கை தனது பற்களால் கடித்தார். இதில் அதிக பலத்துடன் கடித்ததில் விபின் நாக்கின் ஒரு பகுதி துண்டாக வந்து விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த விபின் துண்டான தனது நாக்கை கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழே வந்தார்.

அதற்குள் விபின் பெற்றோர் எழுந்தனர். அவர்கள் விபினிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அவரால் பேச முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களும் கூடினர். அவர்கள் இஷாவை கீழே அழைத்து அடித்து உதைத்து என்ன நடந்தது என்று கேட்டனர்.

பேச்சை இழந்த கணவன்

இதில் தனது கணவனின் நாக்கை கடித்ததை இஷா ஒப்புக்கொண்டார். விபின் துண்டான தனது நாக்குடன் மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் துண்டான நாக்கை பொருத்த முடியாது என்று கூறிவிட்டனர். இனி விபினால் வாழ்நாள் முழுக்க பேச முடியாது என்றும் கூறிவிட்டனர். இது குறித்து விபின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இஷாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இஷா மிகவும் ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார். அதேசமயம் தனது கணவரின் நாக்கை கடித்ததை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க