செய்திகள் :

"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்

post image

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கி இருக்கிறது.

திமுகவுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உடன்பாடு ஏற்படாத சூழலில் இன்று (மார்ச்.14) மூன்றாம் கட்டமாக அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர்.

திமுக குழு
திமுக குழு

ஆனால் திமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், " இன்றைய தினம் பேச்சுவார்த்தை என்றுதான் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்பில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் என எல்லோரும் அந்தப் பணிகளை மேற்கொள்ள இருப்பதனால் இன்றைக்கு நடைபெறும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பம். அந்த விருப்பத்தைத் தான் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம்.

புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ. சண்முகம்

ஆகவே அவர்களுக்கெல்லாம் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுகின்றபோது இடதுசாரி கட்சிகளுக்கு தரமுடியாது என்று சொல்வதற்கான எந்தவித நியாயமும் இல்லை. கடந்தத் தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு.

இதை பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தங்களது தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எக்காரணம் கொண்டும் காலூன்ற விடக்கூடாது!" - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச... மேலும் பார்க்க

`20 ஆண்டு அமெரிக்க தோல்வியை ஆய்வு செய்தோம்' - ஈரான் செய்த ராணுவ மாற்றம்; போரில் என்ன நடக்கிறது?

ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. போர் தொடங்கியவுடன் ஈரானின் தலைவர் அல் கமெனி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்ததால் அடுத்த சில நாட்களில் போரை முடித்துவிட்ட... மேலும் பார்க்க

திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ... மேலும் பார்க்க

கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'.இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா.ட்ரம்ப் என்ன சொல்கிறார்?இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், "எனது வ... மேலும் பார்க்க

கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்' சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன?

திமுக-வில் நடந்த மாற்றம்!சமீபத்தில் திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்திக்கு பதிலாக, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ. வீரமணி என்ற பெண்மணியை மாணவரணிச் செயலாளராக நியமித்து அற... மேலும் பார்க்க