செய்திகள் :

திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!

post image

டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விசர்ஜீத் என்ற நபரை காதலித்து வந்தார். விசர்ஜீத் அடிக்கடி தனது காதலியை சந்திக்க டெல்லி வருவது வழக்கம். இரண்டு பேரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விசர்ஜீத் தனது காதலியை பார்க்க டெல்லி வந்திருந்தார். அவர் அன்றைய தினம் தனது காதலி வீட்டில் தங்கி இருந்தார்.

அதிகாலை 2.30 மணிக்கு அமீனா திடீரென கத்தியை எடுத்து தனது காதலன் விசர்ஜீத் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டார். உடனே விசர்ஜீத் ரத்த காயத்தோடு அருகில் உள்ள இந்துராவ் மருத்துவமனைக்கு தானாக போய் சேர்ந்தார். அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸில் விசர்ஜீத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், காதலி அமீனாவை பார்க்க டெல்லி வந்ததாகவும், இரவில் உறங்கும் முன்பாக பாலில் எதையோ கலந்து குடிக்க கொடுத்ததாகவும், அதிகாலை 2.30 மணிக்கு அரைமயக்கத்தில் இருந்தபோது கூரிய ஆயுதத்தால் தனது அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மறைத்த காதலன்

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், விசர்ஜீத் தனக்கு நடந்த திருமணத்தை காதலி அமீனாவிடம் மறைத்து தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது சமீபத்தில் அமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் கோபத்தில் அமீனா தனது காதலனை வீட்டிற்கு வரவைத்து கத்தியால் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டார் என்று தெரிய வந்தது. இரவில் பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்து அமீனா இக்காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமீனா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட... மேலும் பார்க்க

பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய திமுக பிரமுகர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீ... மேலும் பார்க்க

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமு... மேலும் பார்க்க