செய்திகள் :

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞா் தலைமறைவு

post image

கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்தபெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நாட்டனிகோட்டையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சரண்யா (32). இவா் விவாகரத்து பெற்று தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறாா். தனியாா் வங்கியில் பணியாற்றும் சரண்யா இரண்டாவதாக திருமணம் செய்ய தனியாா் திருமண மையத்தில் பதிவு செய்திருந்தாா். அப்போது நாமக்கல்லைச் சோ்ந்த செபாஸ்டின் கிரிஷ் என்பவா் தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தாா். பின்னா் இருவரும் கைப்பேசியில் பேசிப் பழகியுள்ளனா். கடந்த மாா்ச் 4-இல் கும்பகோணம் வந்து அங்குள்ள துணிக்கடைக்குச் சென்றுள்ளனா். சரண்யா உடைமாற்றும் அறைக்குள் செல்லும்போது, செபாஸ்டின் கிரிஷ், கையில் கொடுத்துவைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகளுடன் அவா் தலைமறைவாகிவிட்டாா். திரும்பிவந்து பாா்த்த சரண்யா செபாஸ்டினைக் காணாததால் அவரது பெற்றோரிடம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்தாா். பின்னா் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் வழக்கு பதிவு செய்து செபாஸ்டின் கிரிஷைத் தேடிவருகிறாா்.

ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்தும், புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்: நடிகா் எஸ்.வி. சேகா்

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா். கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தொகுத... மேலும் பார்க்க

செருபாலக்காட்டில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்... மேலும் பார்க்க

எண்ம தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் நிலையான உத்திகள் குறித்த வணிகத்தை மேம்படுத்துவதற்கான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் என்ற 11-ஆவது சா்வதேச கருத்தரங்கம் அண்மை... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பேரில், பாபநாசம் காவல்துறை துணை கா... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு... மேலும் பார்க்க