செய்திகள் :

திருமா கொடுத்த ட்விஸ்ட்; கட்சி உள்ளடி - செய்யூரில் சோபிக்காத விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!

post image

இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்பட்ட தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் தொகுதி.

காட்டுமன்னார்கோயிலின் சிட்டிங் எம்.எல்.ஏவான சிந்தனைச் செல்வனுக்கு செய்யூர் கொடுக்கப்பட்ட பின்னணியில் இருப்பது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

வழக்கத்திற்கு மாறாக, இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் திருமா.

அப்படி போட்டியிட அவர் 'டிக்' செய்திருந்த தொகுதி 'காட்டுமன்னார்கோயில்'. சில பல குழப்பங்கள், அழுத்தங்களால் காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டியிடவில்லை.

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்

ஆனால், ஏற்கெனவே செய்யூர் தொகுதி சிந்தனைச் செல்வனுக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் அந்தத் தொகுதியில் நின்றே தேர்தலை சந்தித்தார்.

செய்யூர் தொகுதியைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி தான். அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ விசிக-வைச் சேர்ந்த பனையூர் பாபு.

தனக்கு சீட் வழங்கப்படாததால், பனையூர் பாபு சிந்தனைச் செல்வனுக்கு ஒத்தழைப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்தச் சட்டமன்ற தேர்தலில் வீசியுள்ள தவெக அலையும் சிந்தனைச் செல்வனுக்கு கைக்கொடுக்கவில்லை.

இதன் விளைவாக, அதிமுக வேட்பாளர் ராஜசேகர் முதல் இடத்தையும், தவெக வேட்பாளர் மோகன் ராஜா இரண்டாம் இடத்தையும் பெற, சிந்தனைச் செல்வன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க