செய்திகள் :

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

post image

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25).

இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள துணிக்கடையில் ஆகாஷ் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எங்கும் செல்லவில்லை.

தற்கொலை
பெண் காவலர் மர்ம மரணம்

இந்த நிலையில் வெயில் காரணமாக ஆகாஷ் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியதாகத் தெரிகிறது. காலையில் கண் விழித்து வீட்டுக்குள் ஆகாஷ் சென்ற போது மோனிகா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ், கதறி அழுதார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மோனிகாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோனிகா எப்படி இறந்தார் எனப் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகாததால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெயில் காரணமாக வீட்டில் ஏ.சி இல்லாமல் தூங்க முடியவில்லை. அதனால் ஏ.சி வாங்கி தரும்படி மோனிகா, கணவர் ஆகாஷிடம் கேட்டதாகத் தெரிகிறது. குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆகாஷ், ஏசி வாங்கிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மோனிகா இந்த விபரீத முடிவை எடுத்ததாக ஆகாஷ் தரப்பில் போலீஸாரிடம் கூறப்பட்டிருக்கிறது.

சிறுவனின் சடலம்
சடலம்

மோனிகாவின் குடும்பத்தினரோ தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகும்தான் மோனிகாவின் மரணத்துக்கான காரணம் தெரியும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா... மேலும் பார்க்க

5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மகளைக் கொலை செய்த இளைஞர்; 5 மாதங்கள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய தந்தை

தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(53). தி.மு.க-வைச் சேர்ந்த இவர் ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா(26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்ப... மேலும் பார்க்க

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்ததற்கு எதிரான மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ர... மேலும் பார்க்க

சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க