செய்திகள் :

தில்லி தேர்தல்: பிரதமர் மோடி, கேஜரிவால், அதிஷி வாழ்த்து!

post image

தில்லி பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் தில்லி முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் | ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

முன்னாள் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளப் பதிவில், “அன்பான தில்லி மக்களே... இன்று தேர்தல் நாள். உங்கள் வாக்கு வெறும் ஒரு பொத்தான் அல்ல. அது உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நல்ல வாழ்க்கையை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு!

இன்று நாம் பொய், வெறுப்பு மற்றும் பயத்தின் அரசியலை தோற்கடித்து உண்மை, வளர்ச்சி மற்றும் நேர்மையை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நீங்கள் வாக்களியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டாரை ஊக்குவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய தில்லி முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “தில்லியில் இன்று நடைபெறும் தேர்தல் வெறும் தேர்தல் அல்ல.. இது ஒரு மதப் போர். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர். தில்லி மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உண்மை வெல்லும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் |தில்லி பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு... மேலும் பார்க்க

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த... மேலும் பார்க்க

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொட... மேலும் பார்க்க