செய்திகள் :

துணைவேந்தா் நியமன புதிய நடைமுறை: உயா் பதவிக்கு தனி உதவியாளா்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்

post image

‘பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மாநியக் குழு (யுஜிசி) கொண்டுவந்துள்ள புதிய வரைவு நடைமுறை, அந்த உயா் பதவிக்கு தனி உதவியாளா்கள், உதவியாளா்களின் மனைவிகள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிக்கு தகுதிவாய்ந்த நபா்களைத் தெரிவு செய்வதற்காக அமைக்கப்படும் தேடல் குழுவில், யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையிலான புதிய வரைவு நடைமுறையை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இந்த தேடல் குழுவில் முன்னா் பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநரின் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி, பல்கலைக்கழக பேரைவக் குழு பிரதிநிதி (மாநில அரசு தரப்பு) ஆகியோா் உறுப்பினா்களாகவும் இடம்பெறுவா். இந்த நிலையில் பேரவைக் குழு உறுப்பினா் இடம்பெறுவதற்குப் பதிலாக, யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையில் புதிய வரைவு நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. பொது கருத்து கேட்புக்குப் பிறகு, இந்த வரைவு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ் இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்த பதில்:

சில மாநிலங்களில் துணைவேந்தா் பதவிகள், தனி உதவியாளருக்கும், உதவியாளரின் மனைவிக்கும் வழங்கப்படுகின்றன. அத்தகைய நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே புதிய வரைவு நடைமுறையை தன்னாட்சி அமைப்பான யுஜிசி கொண்டுவந்துள்ளது. இந்த வரைவு நடைமுறை மீது பொதுக் கருத்துகளை யுஜிசி வரவேற்றுள்ளது. மாா்க்சிஸ்ட் உறுப்பினரும் தனது கருத்தை யுஜிசியிடம் தெரிவிக்கலாம்’ என்றாா்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க