செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8-ம் ஆண்டு நினைவுநாளில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

post image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம் இன்னமும் கண்ணீர் நிரம்பி வழிகிறது. 8-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட  நிலையில்,  தூத்துக்குடி படுகொலை நடந்து 8 ஆண்டுகளாகியும் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கும் குடும்பத்தினர், புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றிருகும் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

8-ம் ஆண்டு நினைவுதினம்

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினரிடம் பேசினோம், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு  எதிர்கட்சிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டதால்  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  3 ஆண்டுகளாக  36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 3,000-க்கும்  மேற்பட்ட  பக்கங்கள் உடைய  முழுமையான விசாரணை அறிக்கை கடந்த 2022, மே 18-ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், “யாருடைய  உத்தரவும்,  தூண்டுதலுமின்றி  துப்பாக்கிச்சூடு  நடந்துள்ளது.  தமிழ்நாடு  இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை  நடவடிக்கைகளில்  ஒன்று.   அப்போது  பொறுப்பு வகித்த  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர்  வெங்கடேஷ், தூத்துக்குடி  எஸ்.பி. மகேந்திரன், தென் மண்டல  ஐ.ஜி  சைலேஷ்குமார் யாதவ்,  நெல்லை சரக  டி.ஐ.ஜி கபில்குமார்  சரட்கார்,  வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட  17  பேர்தான்  இதற்கு  முழுப்பொறுப்பு” எனவும், குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரின் தவறுகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு  நடந்த   சட்டமன்ற  தேர்தல் பிரசாரத்தின்போது  தூத்துக்குடி  வந்த  முன்னாள் முதல்வர்  ஸ்டாலின்,   ”அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு  நேர்ந்து  நடத்திய  பச்சைப்  படுகொலைதான்  துப்பாக்கிச்சூடு சம்பவம், குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

8-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

நாங்கள்  ஆட்சிக்கு  வந்தால் சிறப்புச்சட்டம்  இயற்றி  ஸ்டெர்லைட்  ஆலையை  நிரந்தரமாக  அகற்றிட  நடவடிக்கை  எடுப்போம்.  துப்பாக்கிச்சூடு  படுகொலைக்கு  காரணமானவர்கள்  எவராக  இருந்தாலும்  எந்த  உயர் பதவியில்  இருந்தாலும்  தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறினார். நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால், இதுவரை அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  சாத்தான்குளம் சம்பவத்தில் குடும்பத்தினருக்கு கிடைத்த நீதி ஏன் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்களைப் பறிகொடுத்த குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை? புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.” என்றனர்.

அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித... மேலும் பார்க்க

ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

மேகதாது அணை: `எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? சிவக்குமாரின் ஆணவப் பேச்சு'- டிடிவி கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க, தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர் `டு' தவெக அரசில் அமைச்சர் - யார் இந்த ஏ.எம்.ஷாஜஹான்!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்த... மேலும் பார்க்க

தங்கமணியை வீழ்த்தி அதிமுக கோட்டையை கைப்பற்றிய கணக்கர்! – பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பின்னணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சருமான திருமதி விஜயலட்சுமி, 1975 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ... மேலும் பார்க்க