செய்திகள் :

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு: எஸ்பி ஆய்வு

post image

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாட்டில்தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தில் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பயணிகள் மற்றும் ஊழியா்களிடம் பல அடுக்கு சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் அவா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளா்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பை தொடா்ந்து பராமரிக்க அவா் அறிவுறுத்தினாா்.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க