செய்திகள் :

‘மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை!’ – செந்தில் பாலாஜி சொல்லும் விளக்கம்

post image

மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கோவை பந்தய சாலை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு மின்சார வாரியம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில், 1987 ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதற்கு முன்பாகவும் பல ஆண்டுகளில் டெண்டரில் ஒரே தொகையை பலர் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரே தொகையை பலர் குறிப்பிட்டால், டெண்டரை பிரித்து தருவது வழக்கமான நடைமுறை தான்.டெண்டரை 3 அதிகாரிகள் குழுக்கள் தான் இறுதி செய்யும். இடையே ஆட்சிகள் மாறியபோதும், இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 4, 5 ஆண்டுகளில் தான் தவறு நடந்ததாக பிரித்து ஒரு குறிப்பிட்ட அமைப்பு புகார் அளித்துள்ளது. அதற்கு முன்பும் இதே நடைமுறை இருந்ததை வசதியாக மறந்து, மறைத்து ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசியல் காரணங்களுக்காக புகார் அளித்துள்ளார்கள்.

அவர்கள் சுயமாக செயல்படவில்லை. மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த இடத்திலும் தவறுகளுக்கு இடமில்லை. இதனால் அரசிற்கோ, மின்சார வாரியத்திற்கோ ஒரு நையா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என பொருத்திருந்து பார்ப்போம். நீதிமன்றத்தின் முழு உத்தரவு வரவில்லை. வந்தால் தான் முழு விவரம் தெரியவரும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை நெருக்கடி என பார்க்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கலந்து பேசி அரசு நடவடிக்கை எடுக்கும். பொதுவெளியில் மக்கள் மன்றத்தில் வீழ்த்த முடியாதவர்கள், நீதிமன்றத்தில் செல்கிறார்கள். வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதால், அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் குற்றவாளி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் என்னை பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒரு முறை அ.தி.மு.க. அரசை பற்றி, எடப்பாடி பற்றி பேசியதை அவர் மறந்திருப்பார். அதை நான் நியாபகப்படுத்துகிறேன். அவற்றை ஒரு முறை திரும்ப பார்த்துவிட்டு, எங்களை பற்றி பேசினால் நியாயமாக இருக்கும்.

மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வெற்றி பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும், தீர்ப்பு வந்தது போல தனிப்பட்ட முறையில் விமர்சனம், தாக்குதலை செய்வது ஏற்புடையது அல்ல. நிறைய அரசியல் தலைவர்கள் மீது வழக்கு இருக்கும். தீர்ப்பு வர வேண்டும். டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது போட்ட வழக்கு என்ன ஆனது? ஒரு வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அ.தி.மு.க, பா.ஜ.க.வினர் தங்களது மீதுள்ள வழக்குகளை விட்டு விட்டு, மற்றவர்கள் மீதுள்ள வழக்குகளை வசதியாக எடுத்துக் கொள்வார்கள்.” என்றார்.

UAE வெளியேறியது இருக்கட்டும்; OPEC என்றால் என்ன? அதன் பணி என்ன? - தெரிந்துகொள்வோம் வாங்க!

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக். இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா எண்ணெய் த... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், மனைவி பர்வீன் உள்ளிட்ட சி... மேலும் பார்க்க

"இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை; முறைப்படுத்த புதிய சட்டம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது அவர்களை மறித்து சென்ற கல்லுரி பேருந்து மீது மதுபோதையில் இருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் மத... மேலும் பார்க்க

குஜராத்: Z+ பாதுகாப்பு, கண்காணிப்புக் கோபுரம், 50 பேர் பாதுகாப்பு; இருந்தும் 'கானமயில் குஞ்சு' மாயம்

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அபூர்வமாக கடந்த 24ம் தேதி கானமயில் குஞ்சு (Bustard chick) ஒன்று பிறந்திருந்தது. மிகவும் அபூர்வமான அழிந்து வரும் உயிரினமாக அது கருதப்படுவ... மேலும் பார்க்க

`பருத்தி விளைஞ்ச பூமி சாமி இது! இன்னும் எத்தன உசுரு?!' - அரசுக்குக் கேட்குமா சிவகாசியின் அபயக்குரல்?

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகள், இந்தியாவின் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன. பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச... மேலும் பார்க்க

25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDU... மேலும் பார்க்க