செய்திகள் :

25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!

post image

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDUIA), இன்று ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த கட்டடம் போலக் காட்சியளிக்கிறது.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து India Today குழுவினர் நேரில் ஆய்வு செய்து, கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``வளாகத்தின் முகப்பில் உள்ள பிரமாண்ட பெயர்ப் பலகையிலேயே 'Upadhyaya' என்ற சொல்லில் 'U' எழுத்தும், 'Institute' என்ற சொல்லில் 'I' மற்றும் 'E' எழுத்துகளும் மாயமாகியுள்ளன. இதுவே அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஒரு குறியீடாகத் தெரிகிறது.

Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology
Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology

வளாகத்திற்குள் நுழைவதே பெரும் சவாலாக இருந்தது. பலமுறை முயன்றும் நிர்வாகத் தரப்பில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்திய பின்பே, ஒரு காவலரின் பாதுகாப்புடன் உள்ளே நுழைய அனுமதி கிடைத்தது.

உள்ளே சென்றபோது கண்ட காட்சி வியப்பளித்தது. விரிவான சாலைகள், நவீன கட்டடங்கள் என அனைத்தும் உள்ளன. ஆனால், ஒரு மாணவரைக்கூட பார்க்க முடியவில்லை. ஒரே மயான அமைதி...

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர், `இங்கு நிரந்தர ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. இது இந்த நிறுவனத்தின் வடிவமைப்பிலேயே இல்லை. இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரிகள்தான் வந்து அவ்வப்போது பாடம் எடுப்பார்கள். எங்களுக்கு என்று நிலையான பாடத்திட்டம் கிடையாது. அனைத்தும் களப்பணி (Fieldwork) மூலமே கற்பிக்கப்படுகிறது' என்றார். ஒரு கல்வி நிறுவனம் எப்படி பாடத்திட்டம் இல்லாமல் இயங்க முடியும் என்ற எங்கள் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த பிரமாண்ட வளாகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகள், 5 மாணவர்கள் என மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே! 1,000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், திறந்தவெளி திரையரங்கம், அருங்காட்சியகம் என அனைத்தும் இருந்தும், அவற்றை அனுபவிக்க அங்கு ஆட்கள் இல்லை.

Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology
Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology

நான்கு மாடிக் கட்டடத்தில் பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டுள்ளன. லேப்கள் (Labs) மற்றும் நூலகங்கள் பெரும்பாலும் திறக்கப்படுவதே இல்லை என அங்கிருந்த காவலர்கள் தெரிவிக்கின்றனர். கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை. எங்கு பார்த்தாலும் தூசு படிந்து கிடக்கிறது. நிர்வாக ரீதியாக 6-7 அலுவலகங்கள் இங்கு இயங்குவதாகக் கூறப்பட்டாலும், ஓர் ஊழியரைக்கூட காண முடியவில்லை.

மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் சென்றபோது, அங்கும் இதே நிலைதான். மாணவ-மாணவிகள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் பேச அனுமதி கேட்டபோது, `மேலிடத்து உத்தரவு, யாரையும் பார்க்க அனுமதி இல்லை' எனக் கூறிவிட்டனர்.

ரூ.289 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட ஒரு நிறுவனம், ஏன் இவ்வளவு முடங்கிப் போயிருக்கிறது? நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டம் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று ஏன் 'வெற்றுக்கூடாக' நிற்கிறது? எனப் பல கேள்விகள் எழுகின்றன.

நமது நாகரிகத்தின் வேர்களைக் கண்டறிய வேண்டிய ஒரு நிறுவனம், தனது அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்பது வரலாற்றுச் சோகம்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றக் காரணத்துக்காக, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வியாண்டுகளில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட கல்லூரி செயலற்று கிடக்கிறது என கல்வி ஆர்வலர்கள் நொந்துக்கொள்கின்றனர்.

கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் - காரணம் என்ன?

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக... மேலும் பார்க்க

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் - ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இத... மேலும் பார்க்க

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; அலறிய மக்கள்... விருந்தில் நடந்தது என்ன?!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சனிக்கிழமை இரவு 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க' விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிச் ச... மேலும் பார்க்க

தமிழ்நாடு தேர்தலை நடத்தும் முதல் பெண் தலைமை அதிகாரி; யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று... மேலும் பார்க்க

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" - சீமான்

தமிழகமெங்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வ... மேலும் பார்க்க

போதுமான ரயில், பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; பயணியின் அனுபவம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது. போதுமா... மேலும் பார்க்க