செய்திகள் :

குஜராத்: அரவணைத்த இஸ்லாமியர்கள்; கோத்ராவில் வெற்றிபெற்ற சுயேச்சை இந்து பெண் வேட்பாளர்!

post image

குஜராத் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தி வந்தது. மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. இது தவிர மொத்தமுள்ள 84 நகராட்சிகளில் 78 நகராட்சிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் மொத்தமுள்ள 34 மாவட்ட பஞ்சாயத்துகளில் 33 மாவட்ட பஞ்சாயத்திலும், மொத்தமுள்ள 260 தாலுகா பஞ்சாயத்தில் 220 தாலுகா பஞ்சாயத்திலும் பா.ஜ.க வெற்றியை பதிவு செய்துள்ளது. நர்மதா மாவட்ட பஞ்சாயத்தை பா.ஜ.க-விடமிருந்து ஆம் ஆத்மி கட்சி பறித்துள்ளது.

அகமதாபாத் நகரில் கடந்த 46 ஆண்டுகளாக பா.ஜ.க வெற்றி பெற்று வந்த காடியா வார்டை காங்கிரஸ் பறித்துள்ளது. 15 மாநகராட்சிகளில் உள்ள 1,044 இடங்களில், பா.ஜ.க வியக்கத்தக்க வகையில் 937 இடங்களையும், காங்கிரஸ் 95 இடங்களையும் கைப்பற்றின. ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சிகள் தலா ஆறு இடங்களைப் பெற்றன.

2021-ஆம் ஆண்டில் சூரத் நகரில் ஒரு புதுமுகக் கட்சியாகக் களமிறங்கி, 120 இடங்களில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 4 இடங்கள் மட்டும் சூரத்தில் கிடைத்து இருக்கிறது.

முஸ்லிம் வார்டில் இந்து வேட்பாளர் வெற்றி!

உள்ளாட்சி தேர்தலில் வியக்கத்தக்க சில முடிவுகளும் கிடைத்து இருக்கிறது. கோத்ரா நகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக, வார்டு எண் 7-லிருந்து சுயேச்சை வேட்பாளரான இந்துப் பெண்மணி அபேக்சாபென் நைனேஷ்பாய் சோனி, ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த வார்டில் இருக்கும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அபேக்சாபென் சோனியின் வெற்றி, கலவரத்தின் மூலம் நாடு முழுவதும் பேசுபொருளாக கோத்ராவின் அரசியல் போக்கை மாற்றியமைத்துள்ளது.

தான் வெற்றி பெற்ற 7-வது வார்டில் வாக்காளராக இல்லாத போதிலும், அவர் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்று இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக முஸ்லிம்கள் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கே தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இங்கு அதிலிருந்து வேறுபட்டு இந்து வேட்பாளர் அதுவும் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

தந்தை இறப்புக்குக் காரணமான ஏர்லைன்ஸின் விமானத்தில் பயணம்? சர்ச்சைகளுக்கு அஜித் பவார் மகன் விளக்கம்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அந்த விமானம் வி.எஸ்.ஆர்.வென்சர் என்ற நிறுவனத்த... மேலும் பார்க்க

`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 19... மேலும் பார்க்க

பிரியாணி... அதிகாலையில் தர்பூசணி; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு - மும்பையில் அதிர்ச்சி!

மும்பை பைதோனி பகுதியில் வசிக்கும் அப்துல்லா தொகாடியா (40) என்பவரும் அவரின் உறவினர்களும் ஒரே வீட்டில் கூடி விருந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். அதிகாலை 1 மணிக... மேலும் பார்க்க

'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆ... மேலும் பார்க்க

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற... மேலும் பார்க்க