செய்திகள் :

தெலங்கானா: நிறைவேறாத காதலால் தற்கொலை; இறந்த மகனுக்கு 23 ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

post image

தெலங்கானாவில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மகபூபாபாத் மாவட்டத்தில், 2003ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் ராம் கோட்டிக்கு, லாலுவும் சுக்கம்மாவும் ஆண்டுதோறும் திருமண விழாவை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராம் கோடி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் காதலித்த இளம் பெண்ணும் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

இதனால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தச் சோகம் ராம் கோடியின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்தது. தங்கள் மகனின் நினைவை மங்க விடாமல், அவரைத் தங்களுடன் நெருக்கமாக வைத்திருக்க அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருமணம் செய்து வைத்து வருகின்றனர்.

இது குறித்து சுக்கம்மா கூறுகையில், ''எங்கள் மகன் மரணத்திற்குப் பிறகு எங்களது கனவில் தோன்றி கோயில் கட்டி அவர்களது திருமணத்தை நடத்தச் சொன்னார். இதையடுத்து எங்கள் வீட்டிற்குள் சிறிய கோவிலைக் கட்டி இருக்கிறோம்.

எங்கள் மகன் மற்றும் அவர் விரும்பிய பெண்ணின் சிலைகளை நிறுவி இருக்கிறோம்'' என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்றும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து இருவருக்கும் பாரம்பர்ய முறைப்படி திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சடங்கு உண்மையான திருமணத்தைப் போலவே, பிரார்த்தனைகள், பிரசாதம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் செய்யப்படுகிறது. தெலுங்கானாவில், ஸ்ரீராம நவமியன்று ராமர் மற்றும் சீதையின் திருமண சடங்குகள் மிகவும் விமரிசையாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பாரம்பர்யத்தால் ஈர்க்கப்பட்டு, பெற்றோர் சிலைகளை தெய்வீக வடிவங்களாகக் கருதி, அதே முறையில் தங்களது மகனின் திருமண விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் ஒட்டுமொத்த கிராமத்தினரும் கூடுகின்றனர்.

ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. ... மேலும் பார்க்க

பீகார்: திடீரென விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 கோடி; என்ன நடந்தது?

பீகாரில் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தேவ்கஞ்ச் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிதா. விவசாயி மனைவியான ரிதா எப்போதாவதுதான் வங்கி பக்கமே செல்வார். சமீபத்தில் தனது வங்கிக் கணக்கில் பணம் எடுக்க உள்ளூ... மேலும் பார்க்க

பர்கர் சலுகை; ஸ்தம்பித்த கடைகள் - ஊழியர்களின் உழைப்புக்கு ₹15 கோடி போனஸ் வழங்கி நெகிழ்ந்த நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பர்கர் நிறுவனமான 'ஃபைவ் கைஸ்' (Five Guys), தனது ஊழியர்களுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹15 கோடி) போனஸ் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.நிறுவனத்தின் சிற... மேலும் பார்க்க

சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத்... மேலும் பார்க்க

"மாதவிடாய் விடுமுறை வேண்டாம்" - கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பெண்கள் மனு

பெண்களுக்குச் சில மாநில அரசுகள் மாதவிடாய் கால விடுமுறை வழங்கி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் கூட மாதத்தில் ஒருநாள் இதற்காக பெண்களுக்கு விடுமுறை கொடுக்கின்றன. ஆனால் இந்த மாதவிடாய் கால விடுமுறை தங்க... மேலும் பார்க்க

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெர... மேலும் பார்க்க