செய்திகள் :

தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

post image

முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் போது கோவை மற்றும் கரூர் என மாறி மாறி சென்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் கோவையில் கூடுதல் கவனம் செலுத்தினார். இதனிடையே தேர்தல் நாளான நேற்று கரூரில் தனது சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜி வாக்களிப்பார் என தி.மு.க-வினர் தரப்பில் சொல்லப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அவர் தனது சொந்த ஊரில் தான் வாக்களித்து இருந்ததால், கரூர் சென்று வாக்களித்து விட்டு கோவைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஆனால் தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தெற்கு தொகுதி முழுக்க வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்த அவர், கரூர் சென்று இறுதிவரை தனது வாக்கை பதிவு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள அவர் தனது ஜனநாயக கடமையை செய்யாததது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டபோது, “கரூரில் தி.மு.க-வின் வெற்றி கன்பார்ம், அதேபோல வெற்றியை கன்பார்ம் பண்ண செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டுள்ளதாக முதலமைச்சரே கூறியுள்ளார். எனவே அவர் கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவை தேர்தல் வெற்றி முக்கியம் என்பதாலும், எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் கோவையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பூத் ஏஜெண்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்தார். அதன் காரணமாக அவரால் கரூர் செல்ல முடியவில்லை” என்றனர்.

நெல்லை: வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்! | Photo Album

நெல்லை: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்!நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்! மேலும் பார்க்க

'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!

முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வா... மேலும் பார்க்க

’நேற்று அதிகாரிகளை கண்டித்து போராட்டம், இன்று பாராட்டு’ – ஒரே நாளில் மாறிய அம்மன் அர்ச்சுணன்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், ராம் நகர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய... மேலும் பார்க்க

’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மஞ்சள... மேலும் பார்க்க

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதி... மேலும் பார்க்க

"வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?" – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவ... மேலும் பார்க்க