'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!
’நேற்று அதிகாரிகளை கண்டித்து போராட்டம், இன்று பாராட்டு’ – ஒரே நாளில் மாறிய அம்மன் அர்ச்சுணன்!
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், ராம் நகர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேர்தல் அமைதியாக நல்ல முறையில் நடக்கிறது. தெற்கு தொகுதியில் வாக்குப்பதிவு 80 சதவீதம் வரும். நேற்று நான் சொன்ன குற்றச்சாட்டுகளில் மாற்றம் இல்லை. நான் குற்றச்சாட்டு சொல்லவில்லை எனில், தேர்தல் அமைதியாக நடந்திருக்காது. போலீஸ் எல்லோரும் அலார்ட்டாக இருந்தார்கள். அதிகாரிகள் இன்று சரியாக செயல்பட்டு இருப்பதை பாராட்டுகிறேன்.

எனக்கு பொய் பேசும் பழக்கம் இல்லை. வேட்பாளராக என்னை அறிவித்தபோது, சொன்னதையே இப்போதும் சொல்கிறேன். 1000 சதவீதம் நான் தான் வெற்றி பெறுவேன். இளைஞர்கள் அதிகமாக அ.தி.மு.க-விற்கு ஓட்டு போடதான் வந்துள்ளார்கள். இளைஞர்களின் எழுச்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி தான். இதை சிரிப்பதற்காக சொல்லவில்லை. அவர் தான் ஆல் பாஸ், லேப்டாப் என அத்தனை திட்டமும் தந்தார். எஸ்.ஐ.ஆரால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததா என எனக்கு தெரியாது. 5 ஆண்டு கஷ்டத்தால் வெகுண்டெழுந்த மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டுமென ஓட்டு போட்டுள்ளார்கள். இளைஞர்கள் விரும்பும் மாற்றம் எடப்பாடி தான்” என்றார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரியும், அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை எனவும் அம்மன் அர்ச்சுணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.















