செய்திகள் :

"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

post image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர் இன்னும் தேர்தல் பிரசார Mood-ல் இருந்து வெளிவராத மாதிரி தோன்றுகிறது. அவர் அரசாங்க Mood-க்கு வர வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் ஆகிவிட்டார். மக்கள் அவருக்கு வாய்ப்பு அளித்திருகிறார்கள். அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நான் கோயம்பேடு வழியாகத் தான் வந்தேன். கோயம்பேட்டில் பட்டப்பகலில் கார் ஏற்றி ஒரு இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். பாரில் ஏற்பட்ட பிரச்னையால் கொல்லப்பட்டிருக்கிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.

'6 மாதம் விமர்சிக்க மட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் 6 நாள்களிலியே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்' என்று முதல்வர் சொல்கிறார்.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் இருக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் இன்னும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

வேறு கட்சியில் இருந்து ஆட்களை சேர்க்கின்ற கவனத்தை பெண்கள் பாதுகாப்பில் செலுத்த வேண்டும் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள்.

Black & White-ல் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மொத்தமாக Black-ஆக மாறிவிடப்போகிறது. அமைச்சர்களை அழைத்து நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து" என்று பேசியிருக்கிறார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க