செய்திகள் :

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

post image

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வார்கள்.

தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பழனி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்வார்கள். இந்த நிலையில், நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அருகிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் கிறிஸ்தவ தேவாலயத்தில் முருக பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வெடுத்த முருக பக்தர்கள்

இது குறித்து பாதயாத்திரை  முருக பக்தர்களிடம் பேசினோம், “வைகாசி விசாகத் திருவிழாவை விட தைப்பூசத் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக நடந்து செல்வோம். நாங்கள், பாபநாசம், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊர்களில் இருந்து குடும்பமாக, குழுக்களாக இணைந்து நடந்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கினால் மதியம் 12 மணி வரை நடந்துவிட்டு வெயில் தணியும் வரை ஆங்காங்கே உள்ள மரத்தடிகள், சாவடிகள், மண்டபங்களில் ஓய்வெடுப்போம்.

உணவுக்குப் பிறகு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடப்போம். இரவு 8 மணிக்கு மீண்டும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கிவிடுவோம். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் தங்குவது சற்று சவாலாக இருக்கும். சில இடங்களில் மின் விளக்கு வெளிச்சம் இருக்காது. குளிரும் இருக்கும். எங்கள் குழுக்களில் பெண் பக்தர்களும், குழந்தைகளும் பாதயாத்திரையாக வருவதால் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பல இடங்களில் மண்டபங்களை நாங்கள் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள்.

ஓய்வெடுத்த முருக பக்தர்கள்

ஆனால், இந்தாண்டு நாங்கள் பாளையங்கோட்டை பகுதியில் பாதயாத்திரையாக நடந்து சென்ற போது புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாகத்தினர் இரவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தனர். தேவாலயத்தின் வளாகத்தில் மட்டுமின்றி ஆலயத்திற்குள்ளும் தங்கிக் கொள்ள அனுமதித்தது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தனர். இரவில் பாதுகாப்பாக தங்கிட அனுமதி அளித்த தேவாலய நிர்வாகத்தினருக்கு எங்களின் பாதயாத்திரை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

ஆங்காரிகளின் கதை 03 : அண்ணன்களால் அடித்துக்கொல்லப்பட்ட பொண்ணு - முத்தாரம்மன் தெய்வமான கதை!

முத்தாரம்மன்!ஆங்காரிகளின் கதை 03‘கிட்டத்தட்ட ஒரு 150 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது'``புதுப்பட்டிக்கு தெக்க இருக்க சீத்தார்க்குளத்துல கவுண்டர் ஜமீன்தாரு ஒருத்தர் இருந்தாரு. அந்த ஊருக்கிட்ட கொ... மேலும் பார்க்க

பெரிய மந்து: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோடர் பழங்குடியினரின் கூரை வேயும் திருவிழா!

ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.தோடர்களின் தலைமையிடமான முத்தநாடு மந்துவில் பாரம்பர்ய கோயிலான "முன்போ தேக்சி அம்மன்" கோயில் உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை,... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: திருக்கோயில் வளாகத்தில் ட்ரோன், ரீல்ஸ் எடுக்க தடை! - திருக்கோயில் நிர்வாகம்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்கள், விஷேச மற்றும் ... மேலும் பார்க்க

ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை!

நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு... மேலும் பார்க்க

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக... மேலும் பார்க்க